உலகளவில் சுமார் 20 மில்லியன் புதிய புற்றுநோய்கள் கண்டறியப்பட்டுள்ளன.
உலகளவில் சுமார் 10 மில்லியன் நோயாளிகள் புற்றுநோயால் இறக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 20 ஆண்டுகளில் உலகில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 28.15 மில்லியனாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பெப்ரவரி 4ஆம் திகதி உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சு, சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டம் குறித்து அதன் பணிப்பாளர் நிபுணரான வைத்தியர் ரஞ்சித் பதுவாந்துடா வெளியிட்டுள்ள குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.