இந்திய அணிக்கு டோனி போன்ற ஒரு வீரராக செயற்பட தான் தயார் என இந்திய T20 அணியின் தலைவர் Hardik Pandya தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற நியூ ஸிலண்ட் அணிக்கெதிரான போட்டியில் சாத்தனை வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியதன் பின்னரான ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
T20 போட்டிகளில் அவரது நுட்பங்கள் வளர்ச்சியடைந்துள்ளதாகவும் போட்டியின் எந்நேரத்திலும் 6 அடித்து போட்டியை மாற்றியமைக்க முடியும் எனிலும் இந்திய அணியின் வெற்றி கேப்டன் டோனி செய்தது போல் போட்டியை இறுதிவரை கொண்டு சென்று வெற்றியை உறுதிசெய்வதற்கு தன்னால் முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
Hardik Pandya இலங்கை அணிக்கெதிரான தொடரையும் நியூ ஸிலண்ட் அணிக்கெதிரான தொடரையும் அடுத்தடுத்து வெற்றி கொண்டு இந்திய அணியின் வெற்றி கேப்டன் ஆக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.