செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைஇன்றைய வானிலை தொடர்பான அறிவித்தல் ........

இன்றைய வானிலை தொடர்பான அறிவித்தல் ……..

Published on

spot_img
spot_img

மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் வடமத்திய மாகாணத்தில் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவிலயல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரப் பிரதேசங்களில் சில இடங்களில் காலை வேளையிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கு மேல் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பொத்துவிலிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

Latest articles

பன்றி இறைச்சி சாப்பிட்டு இரு கைதிகள் உயிரிழப்பு…..

பன்றி இறைச்சி கறி சாப்பிட்டு உயிரிழந்த இரு சிறைக் கைதிகளின் பிரேதப் பரிசோதனை தொடர்பில் மரண விசாரணை அதிகாரி...

பேருந்துக் காப்பாளரின் நேர்மைக்குப் பலரும் பாராட்டு…..

வெளிநாட்டவர் ஒருவரின் பெருந்தொகை பணமடங்கிய பையை கையளித்த பருத்தித்துறை பேருந்துக் காப்பாளரின் செயற்பாட்டினை பலரும் பாராட்டி வருகின்றனர். யாழ்ப்பாணம் –...

ஹோட்டல் நீச்சல் தடாகத்தில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு….

ரம்புக்கன பொலிஸ் பிரிவில் கடிகமுவ பிரதேசத்தில் லபுகொல்ல வத்த பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஊழியர் அங்கு உள்ள நீச்சல்...

தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து….

ஏக்கல பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் நேற்று பிற்பகல் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு 7 மணியளவில் இந்த தீ...

More like this

பன்றி இறைச்சி சாப்பிட்டு இரு கைதிகள் உயிரிழப்பு…..

பன்றி இறைச்சி கறி சாப்பிட்டு உயிரிழந்த இரு சிறைக் கைதிகளின் பிரேதப் பரிசோதனை தொடர்பில் மரண விசாரணை அதிகாரி...

பேருந்துக் காப்பாளரின் நேர்மைக்குப் பலரும் பாராட்டு…..

வெளிநாட்டவர் ஒருவரின் பெருந்தொகை பணமடங்கிய பையை கையளித்த பருத்தித்துறை பேருந்துக் காப்பாளரின் செயற்பாட்டினை பலரும் பாராட்டி வருகின்றனர். யாழ்ப்பாணம் –...

ஹோட்டல் நீச்சல் தடாகத்தில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு….

ரம்புக்கன பொலிஸ் பிரிவில் கடிகமுவ பிரதேசத்தில் லபுகொல்ல வத்த பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஊழியர் அங்கு உள்ள நீச்சல்...