தேசிய பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முக பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை (29) ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்தது.
மார்ச் மாதம் 2 ஆம் திகதி இடம்பெற்ற ஆசிரியர் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, இவர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
இதற்கமைய, புதிதாக 2053 பட்டதாரிகள், ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.