செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeசினிமாபிரபல நடிகர் டேனியல் பாலாஜி காலமானார் .....

பிரபல நடிகர் டேனியல் பாலாஜி காலமானார் …..

Published on

spot_img
spot_img

தென்னிந்திய பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி திடீரென மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அவரது கண்கள் தானம் அளிக்கப்பட்டுள்ளன.

டேனியல் பாலாஜி தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பு மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். சிரியலில் அறிமுகமான இவர் அதன் பிறகு பல திரைப்படங்களில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியவர்.

குறிப்பாக காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், வடசென்னை உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பை இன்றளவும் பலரும் புகழ்ந்து பேசுவார்கள். இது தவிரப் பைரவா, வட சென்னை உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார்.

இப்படி தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வந்த டேனியல் பாலாஜிக்கு நேற்றிரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உடனடியாக அவர் கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அங்கே வைத்தியர்கள் அவரது உயிரைக் காப்பாற்றத் தீவிர முயற்சிகளை எடுத்தனர். இருந்த போதிலும் அவர் சிகிச்சை பலனில்லாமல் காலமாகியுள்ளார். அவருக்கு வயது 48 ஆகும். டேனியல் பாலாஜியின் இந்த திடீர் மறைவு திரையுலகினரின் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டேனியல் பாலாஜியின் இந்த திடீர் மறைவு ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என்று பலரும் சமூக ஊடகங்களில் இரங்கல்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

Latest articles

இயந்திரங்களைப் பயன்படுத்திப் புதையல் தோண்டிய இருவர் கைது …….

பொலன்னறுவை உனகல வெஹெர பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புதையல் தோண்டியதாகக் கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸ்...

பாசிக் குடாவில் நீராடியவர் மாயம் தேடும் பணிகள் தீவிரம் …….

கல்குடா - பாசிக்குடா கடலில் நீராடிக் கொண்டிருந்த நபர்களில் ஒருவர் மாயமாகியுள்ளார். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) மாலை...

குழந்தையை கிணற்றில் கொலை வீசிய தாய் கைது ……

தாயினால் ஒன்பது மாத குழந்தை ஒன்று கிணற்றில் வீசப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து குழந்தையை...

அமெரிக்காவில் பாரிய சூறாவளி அவசரமாக நிலை அறிவிப்பு ……

அமெரிக்காவின் ஓக்லஹோமாவில் வீசிய சூறாவளியால் ஒரு கைக்குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கடுமையான வானிலை காரணமாக ஒரு...

More like this

இயந்திரங்களைப் பயன்படுத்திப் புதையல் தோண்டிய இருவர் கைது …….

பொலன்னறுவை உனகல வெஹெர பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புதையல் தோண்டியதாகக் கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸ்...

பாசிக் குடாவில் நீராடியவர் மாயம் தேடும் பணிகள் தீவிரம் …….

கல்குடா - பாசிக்குடா கடலில் நீராடிக் கொண்டிருந்த நபர்களில் ஒருவர் மாயமாகியுள்ளார். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) மாலை...

குழந்தையை கிணற்றில் கொலை வீசிய தாய் கைது ……

தாயினால் ஒன்பது மாத குழந்தை ஒன்று கிணற்றில் வீசப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து குழந்தையை...