பொலன்னறுவை உனகல வெஹெர பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புதையல் தோண்டியதாகக் கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் நேற்று (28) கைது செய்யப்பட்டுள்ளனர்.
உனகல வெஹெர மற்றும் ஹெதலவத்த ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 23 மற்றும் 32 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில் சந்தேக நபர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்படும் நவீன இயந்திரங்கள் மற்றும் பூஜைப் பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.