பாடசாலை மாணவிகளுக்கு மாதவிடாய் காலத்தில் உபயோகிக்கும் சுகாதார துவாய்களை (sanitary napkins) கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை வழங்கும் புதிய திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.
சிங்கள, தமிழ் புத்தாண்டுக்குப் பின்னர் இதற்கான புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அடிப்படை சுகாதார வசதிகளை பெற்றுக்கொள்வதில் சவால்களை எதிர்நோக்கும் பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார துவாய்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
பாடசாலை மாணவிகளின் சுகாதாரப் பழக்கவழக்கங்களை அதிகரிக்கும் நோக்கில் இந்த ஆண்டு ஏப்ரல் புத்தாண்டைத் தொடர்ந்து அவற்றை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் வழங்கப்படும்.