இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு உட்பட முக்கிய அதிகாரிகளிற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணையை பிறப்பிக்க தயாராவதாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி நியுயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஹமாசுடனான மோதல் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிரதமர் உட்பட முக்கிய அதிகாரிகளுக்கு எதிராக பிடியாணையை பிறப்பிக்கலாம்; என ஐந்து இஸ்ரேலிய மற்றும் வெளிநாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹமாசின் தலைவர்களுக்கு எதிராகவும் பிடியாணைகளை பிறப்பிப்பது குறித்தும் சர்வதேச நீதிமன்றம் ஆராய்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..
நீதிமன்றம் தனது நடவடிக்கையை தொடரதீர்மானித்தால் காசாபள்ளத்தாக்கிற்கு மனிதாபிமான உதவிகள் செல்வதை தடுத்தமை ஹமாசின் ஒக்டோபர் ஏழாம் திகதி தாக்குதலிற்கு மிகக்கடுமையான பதில் தாக்குதலை முன்னெடுத்தமை போன்ற குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் இஸ்ரேலிய அதிகாரிகளிற்கு எதிராக சுமத்தலாம் என ஐந்து அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து கவலை கொண்டுள்ள இஸ்ரேலிய அதிகாரிகள் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவிற்கு எதிராகவும் பிடியாணை பிறப்பிக்கப்படலாம் என தெரிவித்துள்ளனர்