செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைகடலில் குழந்தை பிரசவித்த தாய் .....

கடலில் குழந்தை பிரசவித்த தாய் …..

Published on

spot_img
spot_img

யாழ்ப்பாணம் – நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார்.

நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்று புதன்கிழமை திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து , நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர் பரிந்துரைத்தார். அதனையடுத்து போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு, அம்புலன்ஸ் படகு தற்போது சேவையில் ஈடுபடாததால், பொதுமக்கள் போக்குவரத்து படகில் ஏற்றி குறிகாட்டுவான் நோக்கி அழைத்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடலில் படகு பயணித்துக்கொண்டிருந்த வேளை, பிரசவ வலி பெண்ணுக்கு அதிகரித்ததை அடுத்து, படகின் கீழ் தளத்தில் இருந்த ஆண்களை மேல் தளத்திற்கு அனுப்பி வைத்த பின்னர் , படகில் பயணித்த பெண்களே பிரசவம் பார்த்துள்ளனர்.

படகு குறிகட்டுவான் இறங்கு துறையை வந்தடைந்ததும், அங்கு தயார் நிலையில் நின்ற புங்குடுதீவு வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டியில் தாயையும் சேயையும், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர்.

Latest articles

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டிக்கு விஐயம் செய்த ஆலோசகர் எரிக்சொல்ஹெய்ம்…..

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியிலுள்ள தப்ரபேன் கடலுணவு நிறுவனத்திறற்கு ஜனாதிபதியின் சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக்சொல்ஹெய்ம் உள்ளிட்ட குழுவினர் இன்று விஐயம் செய்தனர். இதன்போது...

ஆப்கானிஸ்தானில் ஷியா மசூதியில் துப்பாக்கிச்சூடு….

ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணம், கசாரா மாவட்டத்தில் உள்ள ஒரு ஷியா மசூதியில் நேற்றிரவு (29-04-2024) வழக்கம்போல் இஸ்லாமியர்கள் தொழுகையில்...

கிராம அபிவிருத்தி நிறுவனத்தினால் வியாபார மேம்படுத்தல் உபகரணங்கள் வழங்கல் ……..

முல்லைத்தீவு மாவட்டத்தில் இயங்கிவரும் கிராம அபிவிருத்தி நிறுவனத்தினால் USAID நிறுவனத்தின் நிதி அனுசரணையில் சிறு தொழில் முயற்சியாளரின் வியாபார...

காத்தான்குடியில் ஐஸ் போதை பொருளுடன் சிக்கிய கும்பல் ……

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி பிரதேசத்தில் 14 கிராம் ஐஸ் போதைப்பொருட்களுடன் இருவரை மட்டக்களப்பு குற்ற விசாரணை...

More like this

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டிக்கு விஐயம் செய்த ஆலோசகர் எரிக்சொல்ஹெய்ம்…..

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியிலுள்ள தப்ரபேன் கடலுணவு நிறுவனத்திறற்கு ஜனாதிபதியின் சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக்சொல்ஹெய்ம் உள்ளிட்ட குழுவினர் இன்று விஐயம் செய்தனர். இதன்போது...

ஆப்கானிஸ்தானில் ஷியா மசூதியில் துப்பாக்கிச்சூடு….

ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணம், கசாரா மாவட்டத்தில் உள்ள ஒரு ஷியா மசூதியில் நேற்றிரவு (29-04-2024) வழக்கம்போல் இஸ்லாமியர்கள் தொழுகையில்...

கிராம அபிவிருத்தி நிறுவனத்தினால் வியாபார மேம்படுத்தல் உபகரணங்கள் வழங்கல் ……..

முல்லைத்தீவு மாவட்டத்தில் இயங்கிவரும் கிராம அபிவிருத்தி நிறுவனத்தினால் USAID நிறுவனத்தின் நிதி அனுசரணையில் சிறு தொழில் முயற்சியாளரின் வியாபார...