செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்ஈரானுக்கு எதிராக புதிய தடைகள் விதிக்ககூடும் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவிப்பு .....

ஈரானுக்கு எதிராக புதிய தடைகள் விதிக்ககூடும் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவிப்பு …..

Published on

spot_img
spot_img

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் நிலவி வருகின்றது.

இந்நிலையில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் அடுத்துவரும் நாட்களில் புதிய தடைகளை விதிக்ககூடும் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மீது ஏவுகணைகள், ஆளில்லா விமானங்களை கொண்டு கடந்த சனிக்கிழமை ஈரான் தாக்குதல் நடத்தியது.

எனினும், அமெரிக்கா உதவியுடன் தாக்குதலை இஸ்ரேல் முறியடித்தது. இந்நிலையில் மத்திய கிழக்கு பகுதியில் போர் ஏற்படுவதற்கான பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது.

ஈரானை எந்நேரமும் இஸ்ரேல் தாக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஈரான் தாக்குதலுக்கு ஜி-7 தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளும் இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளன.

வெள்ளை மாளிகையில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலை அடுத்து, ஜி-7 உறுப்பு நாடுகள், கூட்டணியினர் மற்றும் நட்பு நாடுகளுடன் ஒருங்கிணைந்து ஜனாதிபதி பைடன், விரிவான ஆலோசனையை மேற்கொண்டார்.

இதன்படி, வருகிற நாட்களில் ஈரானுக்கு எதிராக புதிய தடைகள் விதிக்ககூடும் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் தெரிவித்துள்ளார்.

 

Latest articles

ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்புச் சபைக்கு உயர் நீதிமன்றம் தடையுத்தரவு…..

ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்புச் சபைக்கு உயர் நீதிமன்றமானது தலைமை நீதிபதி பதவியைத் தவிர ஏனைய உயர் நீதிமன்ற நீதிபதிகளின்...

மேதின இசை நிகழ்ச்சிக்காக நாட்டை வந்தடைந்த இந்திய இசைக்கலைஞர்கள் ……

மே தின பேரணியுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இந்திய இசைக்கலைஞர்கள் இன்று (30) கட்டுநாயக்க...

மரக்கறியின் விலையில் திடீர் மாற்றம் …..

கண்டி மெனிக்கும்புர பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (30) ஒரு கிலோ கரட் 170 ரூபாவாகவும்,ஒரு கிலோ பீன்ஸ்...

இன்று நள்ளிரவு முதல் எரிபொருளின் விலையில் மாற்றம் …….

நாட்டில் எரிபொருளின் விலையில் இன்று நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய...

More like this

ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்புச் சபைக்கு உயர் நீதிமன்றம் தடையுத்தரவு…..

ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்புச் சபைக்கு உயர் நீதிமன்றமானது தலைமை நீதிபதி பதவியைத் தவிர ஏனைய உயர் நீதிமன்ற நீதிபதிகளின்...

மேதின இசை நிகழ்ச்சிக்காக நாட்டை வந்தடைந்த இந்திய இசைக்கலைஞர்கள் ……

மே தின பேரணியுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இந்திய இசைக்கலைஞர்கள் இன்று (30) கட்டுநாயக்க...

மரக்கறியின் விலையில் திடீர் மாற்றம் …..

கண்டி மெனிக்கும்புர பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (30) ஒரு கிலோ கரட் 170 ரூபாவாகவும்,ஒரு கிலோ பீன்ஸ்...