செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeவிளையாட்டுCricketஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா விளையாடி வருகின்றன, 3 விக்கெட் இழப்பிற்கு...

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா விளையாடி வருகின்றன, 3 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் குவித்து வலுவான நிலையில் ஆஸ்திரேலியா.

Published on

spot_img
spot_img

லண்டன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது. இறுதிப்போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா மோதி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து ஆஸ்திரேலிய தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், உஸ்மான் குவாஜா களமிறங்கினர். 10 பந்துகளை சந்தித்த குவாஜா ரன் எதுவும் எடுக்காமல் (0) சிராஜ் பந்து வீச்சில் அவுட் ஆனார். அடுத்துவந்த மார்னஸ் லபுஷேனுடன் ஜோடி சேர்ந்த டேவிட் வார்னர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். டேவிட் வார்னர் 60 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்த நிலையில் ஷர்துல் தாகூர் பந்து வீச்சில் அவுட் ஆனார். அவரை தொடர்ந்து சிறிது நேரத்தில் லபுஷேன் 26 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முகமது ஷமி பந்து வீச்சில் அவுட் ஆனார்.

அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய வீரர்களின் பந்து வீச்சை இரு வீரர்களும் சிறப்பாக எதிர்கொண்டனர். டிராவிஸ் ஹெட் அதிரடியாக சதம் விளாசினார். ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் விளாசினார். இறுதியில் முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 85 ஓவரில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் குவித்துள்ளது.

டிராவிஸ் ஹெட் 156 பந்துகளில் 156 ரன்களுடனும், ஸ்டீவ் ஸ்மித் 227 பந்துகளில் 95 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணியின் முகமது சிராஜ், முகமது ஷமி, ஷர்துல் தாகூர் தலா 1 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.

Latest articles

தனது பெண் குழந்தையை துன்புறுத்தி சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்ட நபர் கைது…..

வெளிநாட்டில் உள்ள தனது மனைவியை மீண்டும் அழைத்துக் கொள்ளும் நோக்கில் தனது பெண் குழந்தையை துன்புறுத்தி சமூக வலைத்தளங்களில்...

ஐக்கிய அரபு இராச்சியத்தில் சிறையில் உள்ள 44 இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு….

பல்வேறு குற்றங்களுக்காக ஐக்கிய அரபு இராச்சியத்தில் சிறையில் உள்ள 44 இலங்கையர்களுக்கு அந்நாட்டு அரசாங்கத்தால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல்...

அக்கரைப்பற்று – அம்பாறை வீதி விபத்தில் மாணவர்கள் உட்பட பலர் படுகாயம்….

அக்கரைப்பற்று - அம்பாறை வீதியில் அம்பாறை - கல்ஓயா பாலத்திற்கு அருகில் நேற்று (03) பிற்பகல் இலங்கை போக்குவரத்து...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி ஆண்டு – சித்திரை 21 - சனிக்கிழமை (04.05.2024) நட்சத்திரம் : பூரட்டாதி மாலை 7.49 வரை பின்னர்...

More like this

தனது பெண் குழந்தையை துன்புறுத்தி சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்ட நபர் கைது…..

வெளிநாட்டில் உள்ள தனது மனைவியை மீண்டும் அழைத்துக் கொள்ளும் நோக்கில் தனது பெண் குழந்தையை துன்புறுத்தி சமூக வலைத்தளங்களில்...

ஐக்கிய அரபு இராச்சியத்தில் சிறையில் உள்ள 44 இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு….

பல்வேறு குற்றங்களுக்காக ஐக்கிய அரபு இராச்சியத்தில் சிறையில் உள்ள 44 இலங்கையர்களுக்கு அந்நாட்டு அரசாங்கத்தால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல்...

அக்கரைப்பற்று – அம்பாறை வீதி விபத்தில் மாணவர்கள் உட்பட பலர் படுகாயம்….

அக்கரைப்பற்று - அம்பாறை வீதியில் அம்பாறை - கல்ஓயா பாலத்திற்கு அருகில் நேற்று (03) பிற்பகல் இலங்கை போக்குவரத்து...