இலங்கை பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ரிருவென்ரி போட்டி இன்று இலங்கை நேரப்படி பி.ப 2.30 க்கு இடம்பெறவுள்ளது. ஏற்கனவே நிறைவடைந்த இரண்டு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒவ்வொரு வெற்றியை பெற்றுள்ளதால் இன்றைய போட்டி தொடரை தீர்மானிக்கும் போட்டியாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இன்றைய தினம் இலங்கை அணியில் வனிந்து ஹசரங்க மீண்டும் அணியின் தலைவராக செயற்படவுளளார்.