செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeவிளையாட்டுCricketEngland Lions அணியுடனான டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய Sri Lanka A அணி

England Lions அணியுடனான டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய Sri Lanka A அணி

Published on

spot_img
spot_img

England Lions மற்றும் Sri Lanka A அணிகளுக்கிடையிலான உத்தியோகபூர்வமற்ற 4 நாட்கள் கொண்ட முதலாவது டெஸ்ட் போட்டி காலியில் நேற்றைய தினம் நிறைவுக்கு வந்துள்ளது.இப்போட்டியில் England Lions அணிக்கு சவால் விடும்வகையில் துடுப்பெடுத்தாடி நம்மபிக்கை அளித்துள்ளது Sri Lanka A அணி.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய Sri Lanka A அணி முதலாவது இன்னிங்ஸில் 136 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து ஏமாற்றியது. துடுப்பாட்டத்தில் Sadeera Samarawickrama 43 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் England Lions சார்பாக Matthew Fisher 5 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய England Lions அணி Tom Haines இன் சதத்தின் உதவியுடன் 467 என்ற மிகப்பெரிய ஓட்ட எண்ணிக்கையை பெற்று கொண்டது. துடுப்பாட்டத்தில் Tom Haines 118 ஓட்டங்களையும் Alex Lees 56, Matthew Fisher 53 ஓட்டங்களையும் பெற்று கொடுத்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Sri Lanka A அணி சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி இமாலய ஓட்ட எண்ணிக்கையை அடைந்தது. Nishan Madushka 241, Nipun Dhananjaya 128, Oshada Fernando 114, Nuwanindu Fernando 80, Lakshitha Manasinghe 73 என இலங்கை அணி வீரர்களின் சிறப்பான துடுப்பாட்டத்தின் மூலம் Sri Lanka A அணி 9 விக்கெட்களை இழந்து 663 ஓட்டங்கள் எனற இமாலய ஓட்ட எணிக்கையை பெற்று ஆட்டத்தை இடை நிறுத்தியது.

333 என்ற இலக்குடன் தனது இரண்டாம் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய England Lions அணி 7 விக்கெட் இழப்பிற்கு 221 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை ஆட்டம் சமநிலையில் நிறைவுற்றது.

இரு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது போட்டி 7 ஆம் திகதி இடம்பெறும்.

Latest articles

பேருந்துக் காப்பாளரின் நேர்மைக்குப் பலரும் பாராட்டு…..

வெளிநாட்டவர் ஒருவரின் பெருந்தொகை பணமடங்கிய பையை கையளித்த பருத்தித்துறை பேருந்துக் காப்பாளரின் செயற்பாட்டினை பலரும் பாராட்டி வருகின்றனர். யாழ்ப்பாணம் –...

ஹோட்டல் நீச்சல் தடாகத்தில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு….

ரம்புக்கன பொலிஸ் பிரிவில் கடிகமுவ பிரதேசத்தில் லபுகொல்ல வத்த பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஊழியர் அங்கு உள்ள நீச்சல்...

தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து….

ஏக்கல பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் நேற்று பிற்பகல் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு 7 மணியளவில் இந்த தீ...

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டில்ஷானின் தந்தை காலமானார்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் திலகரத்ன டில்ஷானின் தந்தை துவான் மொஹமட் ஜுனைதீன் உயிரிழந்துள்ளார்.இறக்கும் போது அவருக்கு...

More like this

பேருந்துக் காப்பாளரின் நேர்மைக்குப் பலரும் பாராட்டு…..

வெளிநாட்டவர் ஒருவரின் பெருந்தொகை பணமடங்கிய பையை கையளித்த பருத்தித்துறை பேருந்துக் காப்பாளரின் செயற்பாட்டினை பலரும் பாராட்டி வருகின்றனர். யாழ்ப்பாணம் –...

ஹோட்டல் நீச்சல் தடாகத்தில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு….

ரம்புக்கன பொலிஸ் பிரிவில் கடிகமுவ பிரதேசத்தில் லபுகொல்ல வத்த பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஊழியர் அங்கு உள்ள நீச்சல்...

தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து….

ஏக்கல பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் நேற்று பிற்பகல் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு 7 மணியளவில் இந்த தீ...