இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் திலகரத்ன டில்ஷானின் தந்தை துவான் மொஹமட் ஜுனைதீன் உயிரிழந்துள்ளார்.இறக்கும் போது அவருக்கு வயது 71.
களுத்துறையில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிக்கிச்சை பலனின்றி இன்று செவ்வாய்க்கிழமை (7) உயிரிழந்துள்ளார்.
இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 9ஆம் திகதி வியாழக்கிழமை களுத்துறை மாகாண பொது மயானத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.