மடகஸ்கரில் கைது செய்யப்பட்ட இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களான ‘ஹரக்கட்டா’ என அழைக்கப்படும் நந்துன் சிந்தக மற்றும் குடு சாலிந்து என்ற பாணடுரே மல்ஷிதா ஆகியோர் இன்று (14ஆம் திகதி) இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்தக் கடத்தல்காரர்களைக் கொண்டுவருவதற்காக இரண்டு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் இரண்டு பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் மடகாஸ்கருக்குச் சென்றனர்.