சட்டவிரோதமாக இங்கிலாந்துக்கு செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை காட்டுநாயக்க விமான நிலைய புறப்படும் முனையத்தில் வைத்து குடிவரவு குடியகழ்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் பருத்தித்துறையைச் சேர்ந்த 23 வயது இளைஞன் என கூறப்படுகிறது.
குறித்த இளைஞன் போலி விசாவை பயன்படுத்தி நேற்று காலை கட்டார் ஏர்வேஸ் விமானத்தில் டோஹா சென்று அங்கிருந்து இங்கிலாந்துக்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
பின்னர் அவர் பயண அனுமதிக்காக விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் குடிவரவு குடியகழ்வு அதிகாரிகளிடம் தனது விசா மற்றும் ஏனைய ஆவணங்களை ஒப்படைத்துள்ளார்.
இத்தனை அடுத்து அணைத்து ஆவணங்களையும் சோதனையிட்ட அதிகாரிகள் விசா போலியானது என உறுதி செய்த நிலையில் குறித்த இளைஞன் கைது செய்யப்படுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞன் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.