வவுனியாவில் 5 கிலோ கிராம் கஞ்சவுடன் நபர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்தனர்.
வவுனியா புளியங்குளம் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் திடீர் சோதனை ஒன்றை நடாத்திய அதிரடிப்படையினர், தாண்டிக்குளம் பகுதியில் கஞ்சவுடன் நபர் ஒருவரை கைது செய்தனர்.
இதன்போது மோட்டார் சைக்கிளில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோ 124 கிராம் உடைய கஞ்சா மீட்கப்பட்டது.
வவுனியா செக்கட்டிப்பிலவு பகுதியை சேர்ந்த 26 வயதான இளைஞரே கைது செய்யப்பட்டதுடன், மேலதிக விசாரனைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.