உத்தரகண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 பேரும் இன்றைக்குள் மீட்கப்படுவர் என்று சுரங்க மீட்புக்குழு அதிகாரி தெரிவித்துள்ளார். 900 மீ. குழிக்குள் 800 மீ. குழாய் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது.
உத்தரகண்ட் உத்தரகாசி சுரங்கப்பாதை விபத்து நடந்த இடத்தில் இன்று 11ஆவது நாளாக மீட்புப் பணி தொடருகிறது. சுரங்கத்தில் சிக்கியவர்கள் நலமுடன் உள்ளனர்.
சுரங்கத்தின் மற்றொரு பக்கம் துளையிட்டு வருகிறோம் என்று மீட்பு அதிகாரி பாஸ்கர் குல்பே கூறியுள்ளார்.