பஸ் சாரதிகளுக்கு கஞ்சா விற்பனை செய்த சந்தேக நபர் ஒருவரை வெலிமடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வெலிமடை நகரிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்த தனியார் பஸ் சாரதி ஒருவர் கஞ்சா வைத்திருந்த போது அண்மையில் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், இரகசிய முகவரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஊவா பரணகம யாலகமுவ பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து 26 உலர் கஞ்சா பொதிகளும் 130 கிராம் கஞ்சாவும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.