செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைநாட்டின் இருவேறு வாகன விபத்துக்களில் ஒருவர் உயிரிழப்பு 14 பேர் படுகாயம்

நாட்டின் இருவேறு வாகன விபத்துக்களில் ஒருவர் உயிரிழப்பு 14 பேர் படுகாயம்

Published on

spot_img
spot_img

நாட்டின் இருவேறு பகுதிகளில்  ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,  14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பன்வில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாரம்பனாவ –  ஒருதொட்ட வீதியின் செரவத்த சந்தியில்  லொறி வேகக்கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கர வண்டி மீது மோதி  விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது லொறியில் பயணித்த 11 பேரும், முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரும் காயமடைந்த நிலையில் தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.முச்க்கரவண்டி சாரதி மேலதிக சிகிச்சைகளுக்காக பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கேகாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொழும்பு- கண்டி பிரதான வீதியின் கலிகமுவ பிரதேசத்தில் கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணித்து கொண்டிருந்த முச்சக்கரவண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மதிலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன் போது காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி மற்றும் பின்னால் அமர்ந்து பயணித்த நபரும் கோகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 30 வயதுடைய மஹியாவ, கண்டி பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். கோகலைபொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Latest articles

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அரிசியை வழங்க மறுத்த கிராம அதிகாரி மீது கடும் தாக்குதல்…..

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அரிசியை விநியோகிக்க மறுத்த பெண் கிராம அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு...

காரில் திடீரென வெடித்து சிதறிய கைத்தொலைபேசி…..

ஹொரணை பகுதியில் காரின் முன் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கைத்தொலைபேசி திடீரென வெடித்துச் சிதறி தீப்பற்றி எரிந்த சம்பவம் அண்மையில்...

வேலைவாய்ப்பிற்காக இஸ்ரேல் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…..

இந்த வருடத்தின் முதல் நான்கு மாதத்திற்குள் 2,771 இலங்கையர்கள் வேலைவாய்ப்புகளுக்காக இஸ்ரேலுக்கு சென்றுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இலங்கை,...

வீதி அனுமதிப்பத்திரம் இல்லாத பஸ்களுக்கு அபராதம்…..

வீதி அனுமதிப்பத்திரம் இல்லாமல், சட்டவிரோதமான முறையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ்களின் சாரதிகளைக் கைது செய்து வழக்குத் தொடர...

More like this

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அரிசியை வழங்க மறுத்த கிராம அதிகாரி மீது கடும் தாக்குதல்…..

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அரிசியை விநியோகிக்க மறுத்த பெண் கிராம அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு...

காரில் திடீரென வெடித்து சிதறிய கைத்தொலைபேசி…..

ஹொரணை பகுதியில் காரின் முன் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கைத்தொலைபேசி திடீரென வெடித்துச் சிதறி தீப்பற்றி எரிந்த சம்பவம் அண்மையில்...

வேலைவாய்ப்பிற்காக இஸ்ரேல் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…..

இந்த வருடத்தின் முதல் நான்கு மாதத்திற்குள் 2,771 இலங்கையர்கள் வேலைவாய்ப்புகளுக்காக இஸ்ரேலுக்கு சென்றுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இலங்கை,...