செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇந்தியாராணுவ அதிகாரி என கூறி வீடு வாடகைக்கு கேட்டு மோசடி; பெண்ணிடம் ரூ.1½ லட்சம் நூதன...

ராணுவ அதிகாரி என கூறி வீடு வாடகைக்கு கேட்டு மோசடி; பெண்ணிடம் ரூ.1½ லட்சம் நூதன முறையில் திருட்டு.

Published on

spot_img
spot_img

சென்னை புளியந்தோப்பு அடுத்த சூளை ஆவடி சீனிவாசன் தெருவை சேர்ந்தவர் வளர்மதி (வயது 42). இவரது கணவர் ரமேஷ். பானிபூரி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். வளர்மதி தனது மற்றொரு வீட்டை வாடகைக்கு விடுவதாக ஆன்லைனில் விளம்பரம் செய்திருந்தார். இந்நிலையில் கடந்த 3-ந் தேதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய நபர் ஒருவர், தனது பெயர் பவானி சிங் என்றும், ராஜஸ்தானில் ராணுவ அதிகாரியாக பணியாற்றி வருவதாகவும், தற்போது சென்னைக்கு மாறுதலாகி உள்ளதால் உங்கள் வீடு வாடகைக்கு தேவை எனவும் பேசி உள்ளார். மேலும் அந்த வீட்டிற்கு அட்வான்ஸ் கொடுக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார். அதற்கு செல்போன் பணபரிமாற்ற செயலி மூலம் அவரது தொலைபேசி எண்ணிற்கு ரூ.1 மட்டும் அனுப்பும்படி வளர்மதியை கேட்டுள்ளார். பதிலுக்கு பவானி சிங் ரூ.2 அனுப்பிவிட்டு வளர்மதியின் வங்கி கணக்கு விவரங்களை கேட்டுள்ளார். மோசடி நபர் யார்? ஆனால் இதை நம்பி விவரங்களை தர மறுத்த வளர்மதிக்கு பவானி சிங் தன்னுடைய ஆதார் உள்ளிட்ட அடையாள விவரங்களை அனுப்பி வைத்ததை தொடர்ந்து, அதை உண்மை என நம்பிய வளர்மதி தனது வங்கி விவரங்களை கொடுத்துள்ளார். இதையடுத்து அடுத்த சில நிமிடங்களில் வளர்மதியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் எடுக்கப்பட்டதாக வளர்மதிக்கு குறுஞ்செய்தி வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வளர்மதி பவானி சிங்கை தொடர்பு கொள்ள முயற்சித்த போது செல்போன் அணைக்கப்பட்டு இருந்தது. அதைத் தொடர்ந்து வளர்மதி பேசின் பிரிட்ஜ் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் இது குறித்து வழக்குப்பதி செய்து போனில் பேசி மோசடி செய்த மர்ம நபர் யார்? என விசாரித்து வருகின்றனர்.

Latest articles

சிறுவர்களிடம் கைத் தொலைபேசியை வழங்குவது தொடர்பில் காவல்துறை எச்சரிக்கை…..

சிறுவர்களிடம் கைத்தொலைபேசிகளை வழங்குவது தொடர்பில், பெற்றோர்கள் அவதானமாக செயற்படுமாறு காவல்துறை வலியுறுத்தியுள்ளது. அவர்களுக்கு கைபேசிகளை வழங்குவதன் காரணமாக பல்வேறு வகையான...

கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து விபத்துக்குள்ளானதில் 05 பேர் வைத்தியசாலையில் அனுமதி…..

கல்முனையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து செங்கலடி சந்தியில் இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் பேருந்து சாரதி...

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி…..

இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இலங்கையில் முட்டை விலையை கட்டுப்படுத்தும்...

புத்தளத்தில் வலம்புரி சங்குகளுடன் ஒருவர் கைது…..

புத்தளம் - பாலாவி பகுதியில் இரண்டு வலம்புரி சங்குகளை எட்டு இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ய முயற்சித்த இளைஞர்...

More like this

சிறுவர்களிடம் கைத் தொலைபேசியை வழங்குவது தொடர்பில் காவல்துறை எச்சரிக்கை…..

சிறுவர்களிடம் கைத்தொலைபேசிகளை வழங்குவது தொடர்பில், பெற்றோர்கள் அவதானமாக செயற்படுமாறு காவல்துறை வலியுறுத்தியுள்ளது. அவர்களுக்கு கைபேசிகளை வழங்குவதன் காரணமாக பல்வேறு வகையான...

கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து விபத்துக்குள்ளானதில் 05 பேர் வைத்தியசாலையில் அனுமதி…..

கல்முனையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து செங்கலடி சந்தியில் இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் பேருந்து சாரதி...

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி…..

இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இலங்கையில் முட்டை விலையை கட்டுப்படுத்தும்...