சாஸ்வதம்’ உலகளாவிய பாரம்பரிய நடனம் – 2024 பரதநாட்டிய நிகழ்வு லண்டன் பாரதிய வித்யா பவனில் நாளை 30ஆம் திகதி சனிக்கிழமை லண்டன் நேரப்படி மாலை 3.30 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்திய பரதநாட்டிய கலைஞர்கள் சங்கத்தின் ஒத்துழைப்பில் ஏற்பாடாகியுள்ள இந்த நிகழ்வு சலங்கை நர்த்தனாலயா நுண்கலைக் கூடத்தின் நிறுவனரான பரதநாட்டியக் கலைஞர் கலாநிதி ஜெயந்தி யோகராஜாவின் பிரதான பங்கேற்பில் நிகழவிருக்கிறது.