செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇந்தியாரஷ்யாவிலிருந்து இந்தியா சென்ற கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் .......

ரஷ்யாவிலிருந்து இந்தியா சென்ற கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் …….

Published on

spot_img
spot_img

ரஷ்யாவிலிருந்து இந்தியா நோக்கி சென்ற எண்ணெய்க் கப்பல் மீது ஹவுதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மத்திய கிழக்குப் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் காசாவில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே இந்தத் தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருவதால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.

மேலும், காசா மீதான இஸ்ரேல் போருக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக வும், செங்கடல் வழியாக செல் லும் வணிகக் கப்பல்களைக் குறி வைத்து ஏமனில் உள்ள ஹவுதி தீவிரவாதிகள் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

கடல் பகுதியில் செல்லும் பல நாட்டு கப்பல்கள் மீது ட்ரோன்கள் மூலம் குண்டு வீசியும் ஏவுகணை வீசியும் தாக்குதல் நடத்துகின்றனர். இந்நிலையில் நேற்று செங்கடல் வழியாக ரஷ்யாவிலிருந்து இந்தியா நோக்கி சென்ற எண்ணெய்க் கப்பல் மீது ஹவுதிப் படையினர் தாக்குதல் நடத்தினர்.

ஆண்ட்ரோமெடா ஸ்டார் என்றபெயருடைய இந்தக் கப்பல் ரஷ்யாவின் பிரிமோர்ஸ்க் பகுதியிலிருந்து புறப்பட்டுள்ளது. செங்கடல் பகுதியில் இந்த எண்ணெய்க் கப்பல் வந்தபோது தாக்குதல் நடத்தியதாக ஏமனின் ஹவுதி படையினர் தெரிவித்துள்ளனர்.

Latest articles

திருகோணமலையில் திடீரென தீப்பற்றி எரிந்த வீடு…..

திருகோணமலை மாவட்டத்தின் நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இல. 38இல் உள்ள, பெரியகுளம் – விருகம்மான வீட்டுத் தொகுதியில் வீடொன்று...

மூடப்படவுள்ள மதுபான மற்றும் இறைச்சி விற்பனை நிலையங்கள்….

வெசாக் பண்டிகை காலத்தை முன்னிட்டு எதிர்வரும் மே 22, 23, 24 ஆம் திகதிகளில் மதுபான மற்றும் இறைச்சி...

மருதங்கேணியில் மூன்று பிள்ளைகளின் தாயார் படுகொலை…..

மருதங்கேணி தாளையடி பகுதியில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.மூன்று பிள்ளைகளின் தாயான 44 வயதுடைய பெண்ணின் சடலம் அவர்...

குழந்தையை பிரசவித்த 15 வயது பாடசாலைச் சிறுமி……

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குழந்தையை பிரசவித்த 15 வயது பாடசாலைச் சிறுமி ஒருவர் குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு சென்ற...

More like this

திருகோணமலையில் திடீரென தீப்பற்றி எரிந்த வீடு…..

திருகோணமலை மாவட்டத்தின் நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இல. 38இல் உள்ள, பெரியகுளம் – விருகம்மான வீட்டுத் தொகுதியில் வீடொன்று...

மூடப்படவுள்ள மதுபான மற்றும் இறைச்சி விற்பனை நிலையங்கள்….

வெசாக் பண்டிகை காலத்தை முன்னிட்டு எதிர்வரும் மே 22, 23, 24 ஆம் திகதிகளில் மதுபான மற்றும் இறைச்சி...

மருதங்கேணியில் மூன்று பிள்ளைகளின் தாயார் படுகொலை…..

மருதங்கேணி தாளையடி பகுதியில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.மூன்று பிள்ளைகளின் தாயான 44 வயதுடைய பெண்ணின் சடலம் அவர்...