செயற்கை நுண்ணறிவு (AI) தொழில் நுட்பம் மனிதர்களின் வேலைகளை எளிமைப்படுத்தி உதவியாக இருந்தாலும், அதன் வளர்ச்சி மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகவும் உள்ளது.தற்போது இந்த வளர்ச்சி அடுத்த கட்டத்திற்கு சென்று, மரணத்தை கணிக்கும் AI தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டென்மார்க்கின் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், மனிதர்களின் மரணத்தை முன்கூட்டியே கணிக்கும் AI இறப்பு கால்குலேட்டரை கண்டுபிடித்துள்ளனர். இந்த AI இறப்பு கால்குலேட்டரின் பெயர் Life2vec. இந்த AI மற்ற தொழில்நுட்பங்களை விட 78% துல்லியமாக மரணத்தை கணிக்கிறது.