பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் உள்ள அமிர்தசரஸ் மாவட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கு அருகில் ரோரன் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை நோக்கி நேற்று பாகிஸ்தானில் இருந்து ஆளில்லா விமானம் ஒன்று பறந்தது. இதைப் பார்த்ததும், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த எல்லைப் பாதுகாப்புப் படையினர், ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தினார்கள்.
களத்தில் விழுந்த ஆளில்லா விமானத்தை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர். இது சீனாவில் தயாரிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த ஆளில்லா விமானம் பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருள் கடத்தல் கும்பலால் அனுப்பப்பட்டது என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், போதைப்பொருள் தடுப்புப் பாதுகாப்புப் படையினரால் ஆளில்லா விமானம் அனுப்பிய பையில் 450 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் எல்லைப் பாதுகாப்புப் படை ஆளில்லா விமானத்தின் புகைப்படத்தை எக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் கடந்த 9ம் தேதி பெரோஸ்பூர் மாவட்டத்தில் பறந்து கொண்டிருந்த ஆளில்லா விமானம் எல்லை பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டு கைப்பற்றப்பட்டது.