கல்விப் பொதுத் தராதர உயர்தர( 2023) பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சை திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.
2023 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சைக்கு மொத்தம் 346,976 பேர் விண்ணப்பித்திருந்தனர்.இவர்களில், 281445 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்களும் 65531 தனியார் விண்ணப்பதாரர்களும் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.
இதேவேளை கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை மே இரண்டாவது வாரத்தில் தொடங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.