Rotary International District 3220 மாநாடு – 2024இன் ஆரம்ப விழா கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (26) நடைபெற்றது.
இதில் இலங்கை மற்றும் வெளிநாடுகளில் இருந்து 400க்கும் மேற்பட்ட ரோட்டேரியன்கள் மற்றும் பல விசேட பிரமுகர்கள் மற்றும் பேச்சாளர்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் பிரதம பேச்சாளராக தமிழ்நாட்டு அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் அமைச்சர் கலாநிதி பழனிவேல் தியாகராஜனும் கலந்துகொண்டனர்.
கௌரவ விருந்தினரான Rotary Internationalஇன் தலைவரின் பிரதிநிதியான பெர் ஹொயெனும் இதன்போது உரையாற்றினார்.