வரி செலுத்தும் மக்களுக்கு தூய்மையான நகரை உருவாக்கிக் கொடுக்க வேண்டியது பொறுப்பதிகாரிகளின் கடமையாகும்.
ஆனால், அதிகாரிகளின் பொறுப்பற்ற நடவடிக்கைகளால் வரலாற்று பெயர் கொண்ட நகரமான கண்டிநகரம் குப்பைகளால் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, பண்டிகைக் காலங்களில் முறையாக குப்பைகள் அகற்றப்படாமையினால் அதிகளவான குப்பைகள் நிரம்பிக் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், முக்கிய வர்த்தக வளாகங்கள், பஸ் தரிப்பிடங்கள், மக்கள் கூடும் பொது இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகள் நிரம்பிக் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.