உலகில் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இலங்கை முன்னணிக்கு வந்துள்ளதாக இலங்கை சுவாச நோய் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் டொக்டர் நெரஞ்சன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் மக்கள்தொகையில் 10% முதல் 15% வரை ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் முதியோர்களை பெரும் மன மற்றும் உடல் உபாதைகளுடன் பாதிக்கிறது என்றும் அவர் கூறினார்.
ஆஸ்துமா சரியாகக் கட்டுப்படுத்தப்படாவிட்டால், அது மரணத்திற்குக் கூட வழிவகுக்கும். 95% ஆஸ்துமா நோயாளிகளை எளிமையான, மிகவும் செலவு குறைந்த, உயர் செயல்திறன் கொண்ட மருந்துகளால் கட்டுப்படுத்த முடியும் என்று டாக்டர் திஸாநாயக்க கூறினார்.