குரோதி ஆண்டு – சித்திரை 11 – புதன்கிழமை – (24.04.2024)
நட்சத்திரம் : ஸ்வாதி காலை 12.48 வரை பின்னர் விசாகம் திதி : பிரதமை நாள் முழுவதும் யோகம் : சித்த யோகம் நல்லநேரம்: காலை 9.30 – 10.30 / மாலை 4.30 – 5.30
புதன்கிழமை சுப ஓரை விவரங்கள் (காலை 9 முதல் 10 வரை, பகல் 1.30 – 3.00 வரை, 4 முதல் 5 வரை, இரவு 9 முதல் 10 வரை)
சுபகாரியங்கள் : கலை பயில, புது கணக்கு எழுத, பொன் வாங்க சிறந்த நாள்
மேஷம் : உங்கள் அனுபவ அறிவு வெளிப்படும். புது நண்பர்களை அனுசரித்து செல்லவும். விசேஷங்களில் கலந்து கொள்ள முடியும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
ரிஷபம் : எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் குறையும். விலகிச் சென்ற நபர்கள் விரும்பி வந்து பேசுவர். வீட்டு பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
மிதுனம் : தியானத்தால் மனம் நிம்மதியடையும். எதிர்பார்ப்புக்கு தகுந்தாற்போல ஒருவர் அறிமுகமாவர். திருமண காரியம் கைகூடும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
கடகம் : குடும்ப நபர்களிடம் சுமூக உறவு ஏற்படும். நல்லவர்களின் நட்பு நன்மையை தரும். கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை மாறும். உத்யோகத்தில் பொறுப்புகள் தேடி வரும்.
சிம்மம் : பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வெளி உணவுகளை அறவே தவிர்க்கவும். பயணங்கள் தள்ளி போகும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
கன்னி : குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புது நட்பால் ஆதாயம் உண்டு. முக்கிய நபர்களின் சந்திப்பு நிகழும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.
துலாம் : குடும்பம் முன்னேற்ற பாதையை நோக்கி செல்லும். பிரியமானவர்களிடம் விட்டு கொடுத்து போகவும். டென்ஷன், கோபத்தை குறைப்பது நல்லது. தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.
விருச்சிகம் : எதிர்பாலித்தினரால் நன்மை உண்டாகும். பயணத்தால் மகிழ்ச்சி ஏற்படும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
தனுசு : குடும்ப சுமை அதிகரிக்கும். பொது இடங்களில் வார்த்தைகளை அளந்து பேசவும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
மகரம் : கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் கவனம் தேவை. விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். உடல் நலம் சீராகும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
கும்பம் : குடும்ப ரகசியங்களை பாதுகாக்கவும். வாழ்வில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். பழைய சிக்கலை தீர்க்க முடியும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
மீனம் : திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடக்கும். பொது வாழ்வில் மதிப்பு கூடும். ஆன்மீக எண்ணம் மேலோங்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.