தியாக தீபம் அன்னை பூபதியின் 36ஆவது ஆண்டு நினைவுதினம் வெள்ளிக்கிழமை (19) காலை யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்துக்கு அருகில் நடைபெற்றது.
கடந்த 1988ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் திகதி இந்திய இராணுவத்தினரை வெளியேறுமாறு கோரி 8 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அன்னை பூபதி மட்டக்களப்பு மாமாங்கேஸ்வர ஆலய முன்றலில் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்திருந்த நிலையில், ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.