நாட்டில் மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. அத்தோடு, முட்டையின் விலை எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை அதிகரிக்கப்படமாட்டாது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் ரத்னஸ்ரீ அழககோன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
கோழி வளர்ப்பில் 2022இல் வீழ்ச்சி ஏற்பட்ட போதிலும் நாடு தற்போது அதிலிருந்து மீண்டு, 2023ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து, மாதமொன்றுக்கு 6 இலட்சம் என்றளவில் முட்டை உற்பத்தி அதிகரித்து வருகிறது.
உண்மையிலேயே, முட்டையின் விலை 30 ரூபாயாக குறையும் நிலை கூட உண்டாகும். இது எமது தொழில் துறையில் பாரியதொரு வீழ்ச்சியை ஏற்படுத்தக்கூடும்.
மதிய உணவுத் திட்டத்தில் முட்டையை சேர்க்க வேண்டும் என்பதோடு, முட்டைகளை ஏற்றுமதி செய்வது தொடர்பில் ஆராயும்படி அரசாங்க தரப்பிடம் கோரியுள்ளோம் என்றார்.