செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைவாடகைக்கு வாகனங்களை பெற்று அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது!

வாடகைக்கு வாகனங்களை பெற்று அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது!

Published on

spot_img
spot_img

வாடகை அடிப்படையில் வாகனங்களைப்  பெற்று அவற்றை அடகு வைத்து  மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில்  இருவரைக்  கைது செய்வதற்கான விசாரணைகளைப்  பண்டாரவளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

சந்தேக நபர்களில் ஒருவர்  இராணுவ சிப்பாய் எனவும் மற்றையவர்  இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் என்றும்  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பதுளை பிரதேசத்தைச் சேர்ந்த இவர்கள் வர்த்தக நோக்கத்துக்காக பதுளை மற்றும் அதனை அண்டிய  பகுதிகளில் வசிப்பவர்களிடமிருந்து வாகனங்களை வாடகைக்கு  பெற்றுக்கொண்டு சென்றுள்ளனர்.

மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி, வேன் என பல வாகனங்கள் இவ்வாறு வாடகைக்குப் பெற்று வாகன உரிமையாளர்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில்,  வாகனங்களுக்கான வாடகைத் தொகையை முதல் சில மாதங்களுக்கு செலுத்தி வந்துள்ளனர்.

ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு திடீரென வாகனங்களுக்கு வாடகை கொடுப்பதை நிறுத்திவிட்டு தங்களது கைத்தொலைபேசிகளையும் நிறுத்தி வைத்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டபோதே சந்தேக நபர்களை தாம் வாடகைக்குப்  பெற்ற வாகனங்களை அடகு வைத்துள்ளமை தெரிய வந்துள்ளது.

Latest articles

ஏறாவூரில் மர்மமான முறையில் உயிரிழந்த ஆண் ஒருவரின் சடலம் மீட்பு…..

ஏறாவூர் செங்கலடி பகுதியில் கைவிடப்பட்ட வீடொன்றின் பின்னால் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் அதே பகுதியைச்...

வாத்துவை – மொல்லிகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்….

வாத்துவை - மொல்லிகொட பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உணவகம் ஒன்றிற்கு முன்பாக இந்த துப்பாக்கிச்...

யாழில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 06 பேர் கைது….

யாழ். வடமராட்சி கிழக்கு சாலை கடற்பகுதியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் நேற்று மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக ஒளிபாய்ச்சி மீன்பிடியில்...

வவுனியாவில் வழிபாட்டுத் தளங்களில் ஒலிபெருக்கி பாவனையை கட்டுப்படுத்த கோரிக்கை…

வவுனியா மாவட்டத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்காக கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கிகள் சமய...

More like this

ஏறாவூரில் மர்மமான முறையில் உயிரிழந்த ஆண் ஒருவரின் சடலம் மீட்பு…..

ஏறாவூர் செங்கலடி பகுதியில் கைவிடப்பட்ட வீடொன்றின் பின்னால் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் அதே பகுதியைச்...

வாத்துவை – மொல்லிகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்….

வாத்துவை - மொல்லிகொட பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உணவகம் ஒன்றிற்கு முன்பாக இந்த துப்பாக்கிச்...

யாழில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 06 பேர் கைது….

யாழ். வடமராட்சி கிழக்கு சாலை கடற்பகுதியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் நேற்று மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக ஒளிபாய்ச்சி மீன்பிடியில்...