வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் மரியன்னை தேவாலயத்தில் இயேசு பிரான் சிலுவையில் அறையப்பட்ட நாளான புனித வெள்ளி தினத்தை முன்னிட்டு இன்று (29) விசேட கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.
இந்த கூட்டுத்திருப்பலியினை யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் பேனாட் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை ஒப்புக்கொடுத்தார்.
நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்தும் வருகைதந்த கிறிஸ்தவர்கள் இதில் கலந்துகொண்டனர்.