பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள மசூதி ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 20 பேர் பலியாகியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.சுமார் 70 பேர் காயமடைந்துள்ளதாகவும் சிலர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.வெடிப்பு காரணமாக கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதன் அடியில் பலர் புதையுண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது