செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைதொல்பொருள் திணைக்களம் வசமானது கன்னியா வெந்நீர் ஊற்று

தொல்பொருள் திணைக்களம் வசமானது கன்னியா வெந்நீர் ஊற்று

Published on

spot_img
spot_img

திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்றின் வருமான முகாமைத்துவம் மற்றும் பராமரிப்புப் பணிகள் தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்துக்களின் வரலாற்று தொல்பொருள் தளமான கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதியில், பௌத்த மயமாக்கல் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கன்னியா வெந்நீர் ஊற்று தொல்பொருள் தளத்தை, அனுராதபுர காலத்தைச் சேர்ந்த பௌத்த இடிபாடுகளைக் கொண்ட தனித்துவமான இடமாக அடையாளம் காண முடியும் என தொல்பொருள் திணைக்களத்தன் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு முதல் கன்னியா வெந்நீர் ஊற்று, தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதோடு, 2011 ஒக்டோபர் 9ஆம் திகதியிட்ட அரச வர்த்தமானி பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக திருகோணமலை பட்டிணமும் சூழல் பிரதேச சபை, திருகோணமலை மாவட்ட செயலகம் என்பன கன்னியா வெந்நீர் ஊற்றின் வருமான முகாமைத்துவம் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வந்தன.

இந்த நிலையில், தொல்பொருள் திணைக்களம் தலையிட்டு கன்னியா வெந்நீர் ஊற்றின் மூலமாக கிடைக்கும் வருமானத்தை, திணைக்களத்தின் கணக்கின் ஊடாக அரச வருமானத்துடன் சேர்க்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

கடந்த முதலாம் திகதி தொடக்கம், திருகோணமலை பிரதேச தொல்பொருள் திணைக்களம் வருமான முகாமைத்துவம் மற்றும் பராமரிப்பு பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாக தொல்பொருள் திணைக்களத்தின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பணிகள் தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க உள்ளிட்ட அதிகாரிகளின் தலைமையில் இடம்பெற்றுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest articles

இரு மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்….

இரண்டு மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதன்படி தென் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன சற்று முன்னர் ஜனாதிபதி...

தமிழ் திரையுலகின் பின்னணிப் பாடகி உமா ரமணன் காலமானார்….

தமிழ் திரையிலகின் பின்னணி பாடகி உமா ரமணன் (69), சென்னை அடையாறில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக...

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் போராட்டம்….

நாடு முழுவதிலுமுள்ள அனைத்து அரச பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின்...

இன்றைய வானிலை தொடர்பான அறிவித்தல் 

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப்...

More like this

இரு மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்….

இரண்டு மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதன்படி தென் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன சற்று முன்னர் ஜனாதிபதி...

தமிழ் திரையுலகின் பின்னணிப் பாடகி உமா ரமணன் காலமானார்….

தமிழ் திரையிலகின் பின்னணி பாடகி உமா ரமணன் (69), சென்னை அடையாறில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக...

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் போராட்டம்….

நாடு முழுவதிலுமுள்ள அனைத்து அரச பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின்...