செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்அமெரிக்காவில் பிறந்த 3 நாட்களில் நகர்ந்த குழந்தை

அமெரிக்காவில் பிறந்த 3 நாட்களில் நகர்ந்த குழந்தை

Published on

spot_img
spot_img

பிறந்து 3 நாட்களிலே குழந்தை ஒன்று தலையை தூக்கிய நிலையில் நகர்கின்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிகழ்வு அமெரிக்காவில் நடந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பெனிசில்வேனியா சேர்ந்தவர் சமந்தா எலிசபெத். இவருக்கு பிப்ரவரி மாதம் நைலா என்ற குழந்தை பிறந்துள்ளது.

இக்குழந்தை பிறந்த மூன்று நாட்களில் குப்புறப் படுத்து தலையை தூக்கி நகரத் தொடங்கியிருக்கிறது. இதனை சற்றும் எதிர்பாராத சமந்தா தனது போனில் அதனை வீடியோவாக பதிவு செய்திருக்கிறார்.

இது குறித்து சமந்தா கூறுகையில்,

“முதல் தடவை அவள் தனது இடத்திலிருந்து நகர்வதை பார்த்து நான் ஆச்சரியம் அடைந்தேன். என் வாழ்க்கையில், பிறந்த குழந்தை ஒன்று இவ்வளவு விரைவாக நகர்ந்ததை நான் பார்த்ததில்லை.

என் குழந்தை நகர்ந்தபோது அருகில் எனது அம்மா மட்டுமே இருந்தார். நான் இந்த வீடியோவை எடுக்காமல் இருந்திருந்தால் என் கணவர் உட்பட யாரும் இதனை நம்பி இருக்க மாட்டார்கள்” என்றார்.

அதேவேளை குழந்தைகள் பிறந்து  பெரும்பாலும் 8 -9 மாதங்களில் தான் நகரும். இந்த நிலையில் மூன்று நாட்களில் நைலா நகர்ந்த வீடியோ சமூக வலைதளங்களில்  வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Latest articles

சீமெந்தின் விலை குறைப்பு…..

மே மாதம் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 50 கிலோகிராம் சீமெந்து பையின் விலை 50...

இலங்கை – கஸகஸ்தான் இடையில் விமான சேவை…..

இலங்கை மற்றும் கஸகஸ்தான் இடையில் இருதரப்பு விமானப் போக்குவரத்து ஒப்பந்தம் கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கஸகஸ்தான் மற்றும் இலங்கைக்கு...

நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலை விபரம் வெளியானது ……

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் செவ்வாய்க்கிழமை (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக...

வாகன இறக்குமதி தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தன வெளியிட்ட கருத்து …….

சுற்றுலாத்துறை தவிர வேறு எந்த தரப்பினருக்கும் வாகனத்தை இறக்குமதி செய்வதற்கான அனுமதி இதுவரை வழங்கப்படவில்லை. அந்நிய செலாவணி தொடர்பில்...

More like this

சீமெந்தின் விலை குறைப்பு…..

மே மாதம் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 50 கிலோகிராம் சீமெந்து பையின் விலை 50...

இலங்கை – கஸகஸ்தான் இடையில் விமான சேவை…..

இலங்கை மற்றும் கஸகஸ்தான் இடையில் இருதரப்பு விமானப் போக்குவரத்து ஒப்பந்தம் கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கஸகஸ்தான் மற்றும் இலங்கைக்கு...

நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலை விபரம் வெளியானது ……

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் செவ்வாய்க்கிழமை (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக...