இன்று (மார்ச் 15) பலதரப்பட்ட தொழிற்சங்க வேலைநிறுத்தம் இடம்பெற்ற போதிலும், நாடளாவிய ரீதியில் 200க்கும் மேற்பட்ட கிளைகள் வழமை போன்று இயங்குவதாக இலங்கை வங்கியின் (BOC) பொது முகாமையாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்படி, பொது மக்களுக்கு வங்கி சேவைகளை வழங்குவதற்காக தலைமை அலுவலகம் உட்பட 265 கிளைகள் மற்றும் அனைத்து பிரிவுகளும் வழமை போன்று இயங்கி வருவதாக ரசல் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.இதனை ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) உறுதிப்படுத்தியுள்ளது.