செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கை600க்கும் மேற்பட்ட எரிபொருள் நிலையங்களில் சிக்கல்.. வெளியான அறிவிப்பு

600க்கும் மேற்பட்ட எரிபொருள் நிலையங்களில் சிக்கல்.. வெளியான அறிவிப்பு

Published on

spot_img
spot_img

ஒப்பந்தங்களின் நிபந்தனைகளை மீறும் எரிபொருள் நிரப்பு நிலைய விநியோகஸ்தர்களுக்கு எதிராக மீளாய்வு செய்து தேவையான சட்ட நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

CPC மற்றும் Ceylon Petroleum Storage Terminals Limited (CPSTL) அதிகாரிகளுடன் நேற்று நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதன்போது CPC ஆல் இயக்கப்படும் 1050 எரிபொருள் நிலையங்களில் 432 எரிபொருள் நிலையங்கள் மட்டுமே கடந்த வாரம் அனைத்துப் பொருட்களிலும் குறைந்தபட்ச இருப்புப் பராமரித்தது தெரியவந்தது.

இந்நிலையில் மொத்தம் 255 டீலர்கள் எந்தவொரு தயாரிப்புக்கும் குறைந்தபட்ச இருப்புக்களை பராமரிக்கத் தவறியுள்ளனர், அதே நேரத்தில் 363 விநியோகஸ்தர்கள் ஒரு தயாரிப்புக்கான குறைந்தபட்ச இருப்பை வைத்துள்ளனர் என்று அமைச்சர் கூறினார்.

இதன்மூலம், ஒப்பந்தங்களை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாக அமைச்சர் விஜேசேகர தெரிவித்தார்.

அதன்படி அடுத்த 18 மாதங்களுக்கான சரக்கு திட்டம், CPC இன் இருப்புநிலை மறுசீரமைப்பு, போக்குவரத்து பவுசர்களுக்கான கொடுப்பனவுகள், தேசிய எரிபொருள் கடவு QR விநியோகம், நாடளாவிய எரிபொருள் விநியோகத் திட்டம் மற்றும் CPSTL இன் உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டம் ஆகியவை மீளாய்வு செய்யப்பட்டு கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

Latest articles

பேருந்து கட்டணம் குறைப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு….

டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பேருந்து கட்டணத்தை குறைக்க இயலாது என பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜூலை மாதத்திலேயே பேருந்து கட்டணங்களை...

விருந்துபசார நிகழ்வில் ஏற்பட்ட தகராறில் பல்கலை மாணவர்கள் கைது….

பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசார நிகழ்வொன்றில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் 12 பல்கலை மாணவர்கள் கைது...

டெல்லியில் 60க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்….

டெல்லி, தேசிய தலைநகர் வலயப் பகுதிகளில் அமைந்துள்ள 60 க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.இந்த வெடிகுண்டு...

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிப்பு…..

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1,700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொட்டகலையில் இடம்பெற்ற மே தின நிகழ்வில்...

More like this

பேருந்து கட்டணம் குறைப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு….

டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பேருந்து கட்டணத்தை குறைக்க இயலாது என பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜூலை மாதத்திலேயே பேருந்து கட்டணங்களை...

விருந்துபசார நிகழ்வில் ஏற்பட்ட தகராறில் பல்கலை மாணவர்கள் கைது….

பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசார நிகழ்வொன்றில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் 12 பல்கலை மாணவர்கள் கைது...

டெல்லியில் 60க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்….

டெல்லி, தேசிய தலைநகர் வலயப் பகுதிகளில் அமைந்துள்ள 60 க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.இந்த வெடிகுண்டு...