செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeவிளையாட்டுCricketநடப்பு ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த ஜெய்ஸ்வால்

நடப்பு ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த ஜெய்ஸ்வால்

Published on

spot_img
spot_img

புதுடெல்லி, ஐ.பி.எல். போட்டியில் அபாரமாக விளையாடி வருபவர்களில் ஒருவர் ஜெய்ஷ்வால். உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 21 வயது இளம் வீரரான அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரராக ஆடி வருகிறார்.

தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஷ்வால் 14 ஆட்டத்தில் விளையாடி 625 ரன் குவித்துள்ளார். அவரது சராசரி 48.08 ஆகும். ஸ்டிரைக்ரேட் 163.61 ஆக இருக்கிறது. ஒரு சதமும், 5 அரைசதமும் எடுத்து உள்ளார். 82 பவுண்டரிகளும், 26 சிக்சர்களும் அடித்து உள்ளார்.

மேலும், ஐபிஎல் வரலாற்றில் தேசிய அணியில் இடம் பெறாமல் ஒரு சீசனில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற புதிய சாதனைக்கு ஜெய்ஸ்வால் சொந்தக்காரராகி உள்ளார். இதற்கு முன் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஷான் மார்ஷ் 2008 ஐபிஎல் தொடரில் 616 ரன்களை குவித்ததே அதிகபட்சமாக இருந்தது. நடப்பு ஐ.பி.எல்.லில் அதிக ரன் எடுத்த வீரர்களில் டு பிளஸ்சிசை தொடர்ந்து ஜெய்ஷ்வால் 2-வது இடத்தில் உள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறினால் அவரது ரன் குவிப்பு மேலும் அதிகமாகும்.

தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் ஜெய்ஸ்வாலுக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கொடுக்கவேண்டும் என முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Latest articles

ஏறாவூரில் மர்மமான முறையில் உயிரிழந்த ஆண் ஒருவரின் சடலம் மீட்பு…..

ஏறாவூர் செங்கலடி பகுதியில் கைவிடப்பட்ட வீடொன்றின் பின்னால் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் அதே பகுதியைச்...

வாத்துவை – மொல்லிகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்….

வாத்துவை - மொல்லிகொட பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உணவகம் ஒன்றிற்கு முன்பாக இந்த துப்பாக்கிச்...

யாழில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 06 பேர் கைது….

யாழ். வடமராட்சி கிழக்கு சாலை கடற்பகுதியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் நேற்று மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக ஒளிபாய்ச்சி மீன்பிடியில்...

வவுனியாவில் வழிபாட்டுத் தளங்களில் ஒலிபெருக்கி பாவனையை கட்டுப்படுத்த கோரிக்கை…

வவுனியா மாவட்டத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்காக கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கிகள் சமய...

More like this

ஏறாவூரில் மர்மமான முறையில் உயிரிழந்த ஆண் ஒருவரின் சடலம் மீட்பு…..

ஏறாவூர் செங்கலடி பகுதியில் கைவிடப்பட்ட வீடொன்றின் பின்னால் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் அதே பகுதியைச்...

வாத்துவை – மொல்லிகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்….

வாத்துவை - மொல்லிகொட பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உணவகம் ஒன்றிற்கு முன்பாக இந்த துப்பாக்கிச்...

யாழில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 06 பேர் கைது….

யாழ். வடமராட்சி கிழக்கு சாலை கடற்பகுதியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் நேற்று மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக ஒளிபாய்ச்சி மீன்பிடியில்...