செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைவீடொன்றில் இருந்து எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.....

வீடொன்றில் இருந்து எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு…..

Published on

spot_img
spot_img

உடவலவ – கொழும்பகே பகுதியில் உள்ள வீடொன்றின் படுக்கையில் எரிகாயங்களுடன் நபர் ஒருவரின் சடலம் நேற்று முன்தினம் மீட்கப்பட்டுள்ளது.

உடவலவ பகுதியை சேர்ந்த 48 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான பொடி அப்பு எனப்படும் பத்திரனகே அஜித் விஜேரத்ன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மரணத்தில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக உயிரிழந்தவரின் மகன் மற்றும் மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.

இறந்தவரின் மனைவி, வீட்டுக்கு முன்பாக கடை நடத்தி வருவதாகவும், அன்றைய தினம் அதிகாலை அந்த கடையில் இருந்த பொருட்களை கணவர் சேதப்படுத்தியதாகவும், மனைவி பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் படுக்கையில் கிடந்ததுடன், மெத்தை மற்றும் தலையணை எரிந்து நாசமாகியுள்ளது.

தீயினால் அறை சேதமடையவில்லை எனவும், அறையின் தரையில் லைட்டர், மண்ணெண்ணெய் கொள்கலன் இருந்ததாகவும், மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பிலிபிட்டிய தலைமையக பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.மரணம் சந்தேகத்திற்குரியது என உயிரிழந்தவரின் சகோதரி ஒருவர் நீதவான் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

Latest articles

கனமழை காரணமாக ரயில் போக்குவரத்து தடை…..

நாட்டின் பல பகுதிகளில் தற்போது பெய்து வரும் கன மழை காரணமாக கொழும்பு – புத்தளம் ரயில் மார்க்கத்திலான...

முல்லைத்தீவில் உழவியந்திரம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு : ஐந்து பேர் படுகாயம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேராவில் வளைவு பகுதியில் உழவியந்திரம் பெட்டி குடை சாய்ந்ததில் உழவியந்திரத்தில் பயணித்த இளைஞர்...

இராணுவத்தில் இருந்து சட்ட ரீதியாக வௌியேறிய 15,667 வீரர்கள்…..

இராணுவத்தினர் சட்ட ரீதியாக சேவையில் இருந்து விலகுவதற்கு வழங்கப்பட்ட ஒரு மாத பொது மன்னிப்பு காலம் நேற்றுடன் (20)...

மாத்தறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் மூளைக் காச்சலால் உயிரிழப்பு….

மாத்தறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் மூளைக் காச்சலால் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி...

More like this

கனமழை காரணமாக ரயில் போக்குவரத்து தடை…..

நாட்டின் பல பகுதிகளில் தற்போது பெய்து வரும் கன மழை காரணமாக கொழும்பு – புத்தளம் ரயில் மார்க்கத்திலான...

முல்லைத்தீவில் உழவியந்திரம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு : ஐந்து பேர் படுகாயம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேராவில் வளைவு பகுதியில் உழவியந்திரம் பெட்டி குடை சாய்ந்ததில் உழவியந்திரத்தில் பயணித்த இளைஞர்...

இராணுவத்தில் இருந்து சட்ட ரீதியாக வௌியேறிய 15,667 வீரர்கள்…..

இராணுவத்தினர் சட்ட ரீதியாக சேவையில் இருந்து விலகுவதற்கு வழங்கப்பட்ட ஒரு மாத பொது மன்னிப்பு காலம் நேற்றுடன் (20)...