செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைஉணவு வாங்க வந்த வெளிநாட்டவரை அச்சுறுத்திய நபர் கைது...

உணவு வாங்க வந்த வெளிநாட்டவரை அச்சுறுத்திய நபர் கைது…

Published on

spot_img
spot_img

கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவு வாங்க வந்த வெளிநாட்டவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த நபர் 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும் 10 இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

வாழைத்தோட்ட பொலிஸார் சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

அளுத்கடை பகுதியில் உள்ள வீதியில் உணவு வாங்க வந்த வெளிநாட்டவரை தகாத வார்த்தைகளால் திட்டி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் கடை உரிமையாளரை வாழைத்தோட்ட பொலிஸார் நேற்று (16) கைது செய்துள்ளனர்.

வெளிநாட்டவர் ஒரு கொத்து ரொட்டியின் விலையை கேட்டபோது, ​​1,900 ரூபா என்று கூறியதுடன் கடை உரிமையாளர் அதனை வாங்குமாறு அச்சுறுத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் இந்த நாட்களில் வைரலாகி வருவதுடன், அந்த காணொளியின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொழும்பு 12 இல் வசிக்கும் 51 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

Latest articles

இலங்கையில் இன்று துக்க தினம்…

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் இன்றைய தினத்தை தேசிய துக்க தினமாக அரசு...

சட்டவிரோதமாக ரஷ்யாவுக்கு 120 பேரை அனுப்பிய சந்தேக நபர் கைது….

சுற்றுலா விசாவில் சுமார் 120 பேரை ரஷ்யாவிற்கு அனுப்பிய சந்தேகத்தின் பேரில் தெஹிவளை பிரதேசத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி ஆண்டு – வைகாசி 8 - செவ்வாய்கிழமை (21.05.2024) நட்சத்திரம்: சித்திரை காலை 6.23 வரை பின்னர் ஸ்வாதி திதி...

400 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கவுள்ள ஜனாதிபதி

வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 400 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கவுள்ளார். யாழ்ப்பாணம் , தந்தை செல்வா...

More like this

இலங்கையில் இன்று துக்க தினம்…

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் இன்றைய தினத்தை தேசிய துக்க தினமாக அரசு...

சட்டவிரோதமாக ரஷ்யாவுக்கு 120 பேரை அனுப்பிய சந்தேக நபர் கைது….

சுற்றுலா விசாவில் சுமார் 120 பேரை ரஷ்யாவிற்கு அனுப்பிய சந்தேகத்தின் பேரில் தெஹிவளை பிரதேசத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி ஆண்டு – வைகாசி 8 - செவ்வாய்கிழமை (21.05.2024) நட்சத்திரம்: சித்திரை காலை 6.23 வரை பின்னர் ஸ்வாதி திதி...