செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்டென்மார்க்கின் வரலாற்று சிறப்புமிக்க இடத்தில் தீ பரவல் ......

டென்மார்க்கின் வரலாற்று சிறப்புமிக்க இடத்தில் தீ பரவல் ……

Published on

spot_img
spot_img

டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனின் மத்தியிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பழைய பங்குச் சந்தை கட்டிடம் செவ்வாய்கிழமை (16) காலை தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

இந்த கட்டிடம் 17 ஆம் நூற்றாண்டின் போர்சன் நகரின் பழமையான கட்டிடங்களில் ஒன்றாகும்.

தீ பரவியதும் கட்டிடத்திற்குள் இருந்த அனைவரும் வெளியேறியுள்ளனர். இது வரை ஒருவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. சில வரலாற்று ஓவியங்களை மக்கள் விரைந்து மீட்டுள்ளனர்.

400 ஆண்டுகால டென்மார்க் கலாச்சார பாரம்பரியம் தீப்பிடித்து எரிந்துள்ளதாக அந்நாட்டு கலாச்சார அமைச்சர் ஜாகோப் ஏங்கல்-ஷ்மிட் தெரிவித்துள்ளார்.

இது “தி ஃபோல்கெட்டிங்” எனப்படும் டென்மார்க்கின் பாராளுமன்றம் மற்றும் கிறிஸ்டியன்ஸ்போர்க் அரண்மனை ஆகியவற்றிலிருந்து குறுகிய தூரத்திலுள்ள 1625 ஆம் ஆண்டுக்கு முந்தைய கட்டிடமாகும்.

இந்த பங்குச் சந்தை கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு பாதுகாப்பிற்காக பிளாஸ்டிக் உறைகளால் மூடப்பட்டிருந்தது. இது தற்போது டென்டமார்க் வர்த்தக சபையைக் கொண்டுள்ளது.

உள்ளூர் கைவினை கலைஞர் ஹென்ரிக் கிரேஜ், “இது ஒரு சோகமான நாள். இது எங்கள் நோட்ரே-டேம்“ என 2019 ஆம் ஆண்டு பாரிஸில் உள்ள நோட்ரே டேம் தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்துடன் ஒப்பிட்டு கூறியுள்ளார்.

Latest articles

பல்கலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு….

கல்வி சாரா ஊழியர்கள் அனைவரும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சமூகமளிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது...

அஸ்வெசும நலன்புரித் திட்டம் தொடர்பில் வெளியான தகவல்….. 

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் இந்த மாதத்தில் 10 இலட்சம் குடும்பங்களுக்கு நன்மைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் நாடாளுமன்ற வழி வகைகள்...

இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைக்க திட்டம்….

எதிர்வரும் 2030 ஆம் ஆண்டளவில் இராணுவத்தினரின் எண்ணிக்கையை ஒரு இலட்சமாக கொண்டு வருவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்...

விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்…..

களுத்துறை – பாணந்துறையில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றின் பெண் ஆசிரியை ஒருவர் ஓட்டிச் சென்ற சொகுசு கார்...

More like this

பல்கலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு….

கல்வி சாரா ஊழியர்கள் அனைவரும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சமூகமளிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது...

அஸ்வெசும நலன்புரித் திட்டம் தொடர்பில் வெளியான தகவல்….. 

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் இந்த மாதத்தில் 10 இலட்சம் குடும்பங்களுக்கு நன்மைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் நாடாளுமன்ற வழி வகைகள்...

இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைக்க திட்டம்….

எதிர்வரும் 2030 ஆம் ஆண்டளவில் இராணுவத்தினரின் எண்ணிக்கையை ஒரு இலட்சமாக கொண்டு வருவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்...