செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeசினிமாகாஷ்மீரில் 'லியோ' படப்பிடிப்பு; புகைப்படத்தை பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்.

காஷ்மீரில் ‘லியோ’ படப்பிடிப்பு; புகைப்படத்தை பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்.

Published on

spot_img
spot_img

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படத்திற்கு ‘லியோ’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி லோகேஷ் கனகராஜ் இதற்கு முன்பு இயக்கிய ‘கைதி’, ‘விக்ரம்’ ஆகிய திரைப்படங்களின் கதைகள் ஒரே களத்தில் இணைவது போல் உருவாக்கப்பட்டிருந்தது. இதற்கு எல்.சி.யூ. என ரசிகர்கள் பெயரிட்டு அழைத்து வரும் நிலையில், விஜய் நடிக்கும் ‘லியோ’ படமும் இந்த யூனிவர்சில் இணையுமா என்பதே ரசிகர்களின் மிகப்பெரிய கேள்வியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் ‘லியோ’ படத்தின் டைட்டில் புரோமோ காட்சி அண்மையில் வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், அந்த புரோமோவில் இடம்பெற்ற பாடல் பலரையும் கவர்ந்தது. அனிருத் இசையில் ஆங்கில வரிகளைக் கொண்ட அந்த பாடலுக்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பிற்காக சமீபத்தில் ‘லியோ’ படக்குழு காஷ்மீருக்கு சென்றது. இந்நிலையில், காஷ்மீரில் படக்குழுவினருடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தில் நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ், கவுதம் வாசுதேவ்மேனன் மற்றும் பலர் உள்ளனர். இந்த புகைப்படத்திற்கு மரண வெயிட்டிங் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Latest articles

ஏறாவூரில் மர்மமான முறையில் உயிரிழந்த ஆண் ஒருவரின் சடலம் மீட்பு…..

ஏறாவூர் செங்கலடி பகுதியில் கைவிடப்பட்ட வீடொன்றின் பின்னால் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் அதே பகுதியைச்...

வாத்துவை – மொல்லிகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்….

வாத்துவை - மொல்லிகொட பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உணவகம் ஒன்றிற்கு முன்பாக இந்த துப்பாக்கிச்...

யாழில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 06 பேர் கைது….

யாழ். வடமராட்சி கிழக்கு சாலை கடற்பகுதியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் நேற்று மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக ஒளிபாய்ச்சி மீன்பிடியில்...

வவுனியாவில் வழிபாட்டுத் தளங்களில் ஒலிபெருக்கி பாவனையை கட்டுப்படுத்த கோரிக்கை…

வவுனியா மாவட்டத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்காக கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கிகள் சமய...

More like this

ஏறாவூரில் மர்மமான முறையில் உயிரிழந்த ஆண் ஒருவரின் சடலம் மீட்பு…..

ஏறாவூர் செங்கலடி பகுதியில் கைவிடப்பட்ட வீடொன்றின் பின்னால் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் அதே பகுதியைச்...

வாத்துவை – மொல்லிகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்….

வாத்துவை - மொல்லிகொட பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உணவகம் ஒன்றிற்கு முன்பாக இந்த துப்பாக்கிச்...

யாழில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 06 பேர் கைது….

யாழ். வடமராட்சி கிழக்கு சாலை கடற்பகுதியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் நேற்று மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக ஒளிபாய்ச்சி மீன்பிடியில்...