செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeசினிமா'அட்லியின் குழந்தையை பார்த்தேன்' - ரசிகரின் கேள்விக்கு ஷாருக்கான் பதில்

‘அட்லியின் குழந்தையை பார்த்தேன்’ – ரசிகரின் கேள்விக்கு ஷாருக்கான் பதில்

Published on

spot_img
spot_img

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அண்மையில் வெளியான ‘பதான்’ திரைப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், பல்வேறு வசூல் சாதனைகளையும் படைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஷாருக்கான் அடுத்ததாக கோலிவுட் இயக்குனர் அட்லி இயக்கும் ‘ஜவான்’ திரைப்படத்தில் நடிக்கிறார். ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இதில் நடிகை நயன்தாரா, நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் ஜூன் 2-ந்தேதி இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இதனிடையே இயக்குனர் அட்லி-பிரியா தம்பதிக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது. இதை கடந்த ஜனவரி 31-ந்தேதி அட்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார். இதையடுத்து அட்லி-பிரியா தம்பதிக்கு திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் நடிகர் ஷாருக்கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய போது அவரிடம், ‘அட்லியின் குழந்தையை பார்த்தீர்களா?’ என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஷாருக்கான், தான் அட்லியின் குழந்தையை பார்த்ததாகவும், இறைவனின் அருளால் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

Latest articles

குழந்தைகளை தத்துக்கொடுக்கும் வீதம் இலங்கையில் அதிகரிப்பு…..

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாகக் குழந்தைகளை தத்துக்கொடுக்கும் வீதம் அதிகரித்துள்ளதாக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது . ஒரு வருடத்தில் சராசரியாக சுமார்...

கடமைக்கு சமூகமளிக்காத இராணுவத்தினர் பணி நீக்கம்….

விடுமுறை எடுக்காமல் கடமைக்கு சமூகமளிக்காத 9,000க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இரண்டு வாரங்களுக்குள் பொதுமன்னிப்பின் கீழ் பணி நீக்கம் செய்யப்பட்டதாக...

யாழில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சொக்கலேட் விற்பனை செய்தவருக்கு கிடைத்த தண்டனை….

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சொக்லேட்கள் மற்றும் பிஸ்கட் என்பவற்றை விற்பனை செய்தவரிடம் ஒரு இலட்ச ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்,...

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அரிசியை வழங்க மறுத்த கிராம அதிகாரி மீது கடும் தாக்குதல்…..

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அரிசியை விநியோகிக்க மறுத்த பெண் கிராம அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு...

More like this

குழந்தைகளை தத்துக்கொடுக்கும் வீதம் இலங்கையில் அதிகரிப்பு…..

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாகக் குழந்தைகளை தத்துக்கொடுக்கும் வீதம் அதிகரித்துள்ளதாக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது . ஒரு வருடத்தில் சராசரியாக சுமார்...

கடமைக்கு சமூகமளிக்காத இராணுவத்தினர் பணி நீக்கம்….

விடுமுறை எடுக்காமல் கடமைக்கு சமூகமளிக்காத 9,000க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இரண்டு வாரங்களுக்குள் பொதுமன்னிப்பின் கீழ் பணி நீக்கம் செய்யப்பட்டதாக...

யாழில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சொக்கலேட் விற்பனை செய்தவருக்கு கிடைத்த தண்டனை….

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சொக்லேட்கள் மற்றும் பிஸ்கட் என்பவற்றை விற்பனை செய்தவரிடம் ஒரு இலட்ச ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்,...