மேம்பட்ட கணினி தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றைப் பயன்படுத்தி, கிட்டத்தட்ட 2,000 ஆண்டுகள் பழமையான ஹெர்குலேனியம் சுருள்களை புரிந்துகொள்வதில் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளனர். 2,000 க்கும் மேற்பட்ட எழுத்துக்கள், முழுமையான பந்திகள் உட்பட, ஒரே சுருளில் இருந்து வெளிவந்துள்ளன, இது பழங்காலத்திலிருந்தே தத்துவ விவாதங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
“virtual unwrapping” எனப்படும் ஒரு முறையின் மூலம் அடையப்பட்ட இத்திருப்புமுனை, சுருள்களை உடல் ரீதியாக அவிழ்க்காமல், அவற்றின் உடையக்கூடிய நிலையைப் பாதுகாத்து அவற்றை ஆய்வு செய்ய அறிஞர்களை அனுமதிக்கிறது. இவ்வாறு virtual unwrapping செய்யப்பட்ட சுவடிகளில் தத்துவஞானி பிலோடெமஸின் (Philodemus) எழுத்துக்களும் உள்ளன, இவை இன்பம் மற்றும் மிகுதி போன்ற தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இப்புதிய கண்டுபிடிப்புகள் Classical ஆய்வுகளில் ஒரு மகத்தான முன்னேற்றத்தைக் காட்டுவதோடு பழங்கால கலைப்பொருட்களில் இருந்து மேலும் பல உண்மைகளை கண்டறிய உதவும் என உறுதியளிக்கிறது.