வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா விதிகளை கடுமையாக்க அவுஸ்திரேலியா அரசாங்கம் தீர்மனித்துள்ளது.
இந்த வாரத்திலிருந்து விதிகள் கடுமையாக்கப்படும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்வோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதால் அவுஸ்திரேலிய அரசாங்கம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரவிக்கப்படுகிறது.
மேலும், பட்டதாரி விசா மற்றும் மாணவர் விசாக்களுக்கான ஆங்கில மொழித் தேவை அதிகரிக்கப்பட்டுள்ளது.