இன்று (20) ஜா-எல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ இந்தியாவில் இருந்து 10,000 மெற்றிக் தொன் வெங்காயம் அரச நிறுவனம் ஊடாக அல்லது வேறு தனியார் விநியோகஸ்தர் ஊடாக இறக்குமதி செய்யப்படுவதா என்பது தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.