ரஃபாவில்தஞ்சமடைந்துள்ள மக்களை பாதுகாப்பதற்கான நம்பகதன்மை மிக்க நடைமுறைப்படுத்தக்கூடிய திட்டம் எதனையும் சர்வதேச சமூகம் இதுவரை முன்வைக்கவில்லை என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சமூகத்தின் கரிசனைகளையே அவுஸ்திரேலியா வெளியிடுவதாக தெரிவித்துள்ள பெனிவொங் அவுஸ்திரேலியாவின் நெருங்கிய நாடுகளின் கரிசனைகளை நாடாளுமன்றத்தில் வாசித்துள்ளார்.
எனது கருத்துக்கள் சர்வதேச சட்டத்தின் கொள்கைகள் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் அடிப்படையிலானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பகுதி மீது இஸ்ரேல் முன்னெடுக்ககூடிய பாரிய நடவடிக்கை குறித்த எங்கள்ஆழ்ந்த கரிசனைகளை மீண்டும் வலியுறுத்தவிரும்புகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அங்கு தஞ்சமடைந்துள்ள மில்லியன் கணக்காண மக்களிற்கு பேரழிவு ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் நெரிசலாக வாழும் பகுதிகளில் இராணுவநடவடிக்கை என்பது ஆபத்தானது பொதுமக்களிற்கு இழப்புகள் ஏற்படலாம் எனவும்; அவர்தெரிவித்துள்ளார்.