செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கையாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.....

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு…..

Published on

spot_img
spot_img

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் லாண்ட் மாஸ்ரர் – ஹயஸ் ரக வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் நுணாவில் பகுதியில் இன்று (01) காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் லாண்ட் மாஸ்ரரில் பயணித்த ஐவரில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மூவர் படுகாயங்களுடன் யாழ். போதனா வைத்தயசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹயஸ் வாகனத்தில் பயணித்த சிறுமி மற்றும் லாண்ட் மாஸ்ரர் சாரதி ஆகியோர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோண்டாவில் பகுதியை சேர்ந்த ம.சதீஸ்குமார் என்பவரே படுகாயமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொழும்பில் இருந்து வெளிநாட்டவர்களை ஏற்றிக் கொண்டு யாழ் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ஹயஸ் வான் சாரதி முன்னே பயணித்துக் கொண்டிருந்த லாண்ட் மாஸ்ரரின் பின்னால் சென்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

விபத்துத் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Latest articles

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி ஆண்டு – வைகாசி 9 - புதன்கிழமை - (22.05.2024) நட்சத்திரம் : ஸ்வாதி காலை 8.17 வரை...

இந்தியாவின் அகமதாபாத் விமான நிலையத்தில் வைத்து ISIS அமைப்புடன் தொடர்புடைய 4 பேர் கைது…..

தடை செய்யப்பட்ட ISIS இயக்கத்தை சார்ந்தவர்கள் எனக் கூறப்படும் நபர்கள் கொழும்பு கொட்டாஞ்சேனை, க்ரான்பாஸ், வத்தளை, மாளிகாவத்தையைச் சேர்ந்த...

வாகனங்களை இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்

நாட்டின் எதிர்கால தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்ய தயாராக இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய...

போதைப்பொருள் பாவனையால் மாடியிலிருந்து குதித்து 19 வயது யுவதி உயிரிழப்பு…..

ஹோமாகம, ஹிரிப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் போதைப்பொருளை பயன்படுத்தி கொண்டிருந்த யுவதியொருவர் பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்வதற்காக வீட்டு மாடியிலிருந்து...

More like this

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி ஆண்டு – வைகாசி 9 - புதன்கிழமை - (22.05.2024) நட்சத்திரம் : ஸ்வாதி காலை 8.17 வரை...

இந்தியாவின் அகமதாபாத் விமான நிலையத்தில் வைத்து ISIS அமைப்புடன் தொடர்புடைய 4 பேர் கைது…..

தடை செய்யப்பட்ட ISIS இயக்கத்தை சார்ந்தவர்கள் எனக் கூறப்படும் நபர்கள் கொழும்பு கொட்டாஞ்சேனை, க்ரான்பாஸ், வத்தளை, மாளிகாவத்தையைச் சேர்ந்த...

வாகனங்களை இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்

நாட்டின் எதிர்கால தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்ய தயாராக இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய...